×

தேன்கனிக்கோட்டை அருகே எருது விடும் விழா கோலாகலம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூனா துர்கம் கோயில் திருவிழாவையொட்டி எருதுவிடும் விழா நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துக்கோட்டையில், மல்லிகார்ஜூனா துர்கம் தேர்திருவிழாவை முன்னிட்டு, எருது விடும் விழா நடைபெற்றது. விழாவில் தேன்கனிக்கோட்டை, ஓசூர், ஆனெக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளை உரிமையாளர்கள், காளைகளின் கொம்புகளில் அலங்கரிக்கப்பட்ட தட்டிகளை கட்டி ஓட விட்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகளின் கொம்பிலிருந்த தட்டிகளை பறிக்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டனர். காளைகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விழாவை காண தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவை தொடர்ந்து, இரவு பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை மல்லிகார்ஜூனா துர்கம் கோயில் திருவிழா கமிட்டியினர்
செய்திருந்தனர்.

Tags : Golagalam , Dhenkanikottai: Bulling ceremony for Mallikarjuna Durgam Temple near Dhenkanikottai
× RELATED ஜெர்மனியில் புகழ்பெற்ற கொலோன் கார்னிவல் திருவிழா கோலாகலம்.!!