நெல்லை: அமமுக, சமக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அமமுக வேட்பாளர் பால் கண்ணன், சமக வேட்பாளர் அழகேசன், சுயேச்சை வேட்பாளர் மாரியப்ப பாண்டியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.