புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 5.95 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கந்தர்வகோட்டையில் நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட தங்கம் சிக்கியது. பறிமுதல் செய்த தங்கத்தை பறக்கும்படையினர் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.