×

பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கந்தர்வகோட்டை மாரியம்மன் கோயில் தெருவில் தூய்மை பணி

கந்தர்வகோட்டை, ஜன.5: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே, தெருவில் வசிப்பவவ்கள் தங்களது வீட்டுக் கழிவுகளை தினசரி கொட்டி வந்தனர். இது பொதுமக்களுக்கும், அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கும், திருக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு சுகாதாரமின்மையை ஏற்படுத்தி வந்தது. இந்த குப்பை மேட்டை அகற்ற வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை கருத்தில் கொண்டு ஊராட்சி மன்ற துப்புரவு பணியாளர்களை வைத்து தெருவை சுத்தம் செய்து கொடுத்தார். பொதுமக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

Tags : Mariamman Temple Street ,Kandarwakottai ,
× RELATED ஸ்ரீமுஷ்ணம் அருகே காட்டுப்பகுதியில்...