×

சபரிமலையில் பங்குனி திருவிழா தொடக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 நாட்கள் நடக்கும் பங்குனி திருவிழா நேற்று தொடங்கியது. பங்குனி  மாத பூஜைகள், மற்றும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த  14ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 நாட்கள் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா நேற்று (19ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ேகாயில் தந்திரி கண்டரர் ராஜீவரு தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடந்தது. 27ம் ேததி இரவு சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது. 28ம் தேதி பம்ைபயில் ஆறாட்டுடன் திருவிழா நிறைவடைகிறது. அன்று இரவு கோயில் நடை சாத்தப்படுகிறது.

Tags : Panguni festival ,Sabarimala , Panguni festival begins in Sabarimala
× RELATED மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா