×

கைவிரல்களை விரித்துக் காட்டியபடி உதயசூரியன் ஜெயிக்கும் என கூறி உயிரைவிட்ட திமுக தொண்டர்: திண்டுக்கல் அருகே நெகிழ்ச்சி

வத்தலக்குண்டு: ‘உதயசூரியன் ஜெயிக்கும்... ஸ்டாலின் முதல்வராவார்’ என கூறிக்கொண்டே திமுக தொண்டரான முதியவர் உயிரைவிட்ட சம்பவம் திண்டுக்கல் அருகே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே எழுவனம்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா (90). திமுக தொண்டர். வயது காரணமாக கட்சி வேலைகளை செய்ய முடியாவிட்டாலும், மற்றவர்களிடம் எப்போதும் திமுகவின் புகழ்பாடிக் கொண்டே இருப்பார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் டிவிக்களில் செய்தி பார்ப்பது; பத்திரிகைகளில் தேர்தல் செய்திகளையும் விடாமல் படித்து வந்தார்.

மற்றவர்களிடமும் வெற்றி வாய்ப்பு பற்றி விசாரித்து வந்தார். நேற்று அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அந்த சூழ்நிலையிலும் தனது குடும்பத்தை பற்றி பேசாமல், ‘‘உதயசூரியன் ஜெயிக்கும்; திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் முதல்வர் ஆவார்’’ என்று சொல்லி கொண்டே உதயசூரியன் சின்னத்தை குறிக்கும் வகையில் கை விரல்களை விரித்துக் காட்டியவாறு உயிரை விட்டுள்ளார். தகவலறிந்த வத்தலக்குண்டு ஊராட்சி துணை தலைவர் முத்து, விராலிப்பட்டி ஊராட்சி  தலைவர் நாகராஜன், விராலிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் விஜயகர் மற்றும் திமுகவினர் பலர் நேரில் சென்று சுப்பையாவின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.உயிர் போகும் நிலையிலும் திமுக ஜெயிக்கும் என்று சாகும் தருணத்திலும் கூறிய சுப்பையா போன்ற தொண்டர்களால் திமுக இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு உயிர்ப்போடு இருக்கும் என்று பலரும் கூறினர்.



Tags : DMK ,Udayasooriyan ,Dindigul , DMK volunteer who claimed that Udayasooriyan will win as he spreads his fingers: Flexibility near Dindigul
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்