டெல்லி: அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் உரையாடல் கசிவு குறித்து தங்களது எந்த தகவலும் வரவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து முன்கூட்டியே அர்னாப் வாட்ஸ்அப்பில் உரையாடியது சமீபத்தில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.