ஐதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிஐடி நோட்டீஸ் வழங்கியுள்ளது. விசாரணைக்காக சிஐடி அலுவலகம் வருமாறு ஐதராபாத்தில் உள்ள சந்திரபாபு வீட்டிற்கு சென்று நோட்டீஸ் தந்துள்ளனர். சந்திரபாபு நாயுடு ஆட்சியில் தலைநகர் அமராவதியை அமைக்க நிலங்கள் மையகப்படுத்தியதில் முறைகேடு என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.