தங்கவயல்: மத்திய பொது துறை நிறுவனமான பி.இ.எம்.எல்.தொழிற்சாலையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து சங்கம் சார்பில் 24-வது நாளாக ேபாராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. தங்கவயலில் உள்ள மத்திய பொது துறை நிறுவனமான பி.இ.எம்.எல்.தொழிற்சாலையை தனியார் நிறுவனத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதை கண்டித்து தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் நடந்து வரும் போராட்டத்தில் கோலார் மாவட்ட மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் காந்தி நகர் நாராயணசாமி ஆதரவு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, ‘‘நாடு முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்தி வரும் போராட்டங்களை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது . மக்கள் சக்தியை புரிந்து கொள்ளும் காலம் வரும். தொடர் தர்ணா போராட்டம் தற்காலிகமாக நிறைவு பெற்றாலும், தொடர்ந்து தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.” என்றார்.