×

சி.டி.விவகாரத்தில் பின்னணியில் உள்ளது யார்?: எச்.டி.குமாரசாமி கேள்வி

பெங்களூரு: முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி சி.டி. விஷயத்தில் பின்னணியில் உள்ள அந்த மகாநாயகன் யார் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். ராம்நகரில் இது தொடர்பாக எச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சி.டி. வழக்கின் பின்னணியில் உள்ள அந்த மகாநாயகன் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமுடன் காத்திருக்கிறேன். சி.டி. வழக்கு தற்போது மக்களிடம் நகைச்சுவையாகி மாற்றத்தை ஏற்படுத்தும்.  

இந்த வழக்கு ஏதோ ஒரு கயிறாகவுள்ளது கடைசியில் யாரை சுற்றிக்கொள்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  அதே போல் இது போன்ற தனிப்பட்ட விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. மாநில மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது. அவர்களின் நலனுக்காக நாங்கள் வேலை செய்வோம். டி.சி. வழக்கில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் ஏன் அவருடைய பெயரை கொண்டு வந்தார் என்று தெரியவில்லை. யாராவது தெரிவித்தார்களா ஏன் அவரே சந்தேகித்து கொண்டுள்ளார் என்று தெரியவில்லை என்றார்.


Tags : D.C. ,Kumarasami , HD Kumaraswamy, Question
× RELATED உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்,...