×

கும்மிடிப்பூண்டி அருகே குடிசை வீடு எரிந்து சாம்பல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே குடிசை வீடு எரிந்து சாம்பல் ஆனது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அமிர்தம் மங்களம் கிராமத்திதை சேர்ந்தவர் மன்மதா (42). இவர், குடும்பத்துடன் நேற்று வெளியில் சென்றனர். இந்நிலையில் மன்மதா, வீட்டில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ பற்றி எரிந்தது. அக்கம் பக்கஹ்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். முடியவில்லை. இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர் ஆனால் அதற்குள் வீட்டில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம், 2 சவரன் நகை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Gummidipoondi , The cottage near Gummidipoondi was burnt to ashes
× RELATED சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை...