சென்னை: சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தருவதாக, அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பு அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக்கழக மாநில பொதுச்செயலாளர் தமிழரசன் அளித்த பேட்டி: நாங்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்களது முக்கிய கோரிக்கையாக, எளிய சாதியான எங்களுக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் சட்டபாதுகாப்பு கோரி, பலமுறை மனு அளித்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அதிமுக அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்தி விட்டது. ஆகையால், ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத்தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்றார்.