சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படையின் இளைஞர் அணிச் செயலாளர் அஜய் வாண்டையார் திமுகவின் ஆர்.எஸ்.பாரதியிடம் கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாஸ் அறிவித்த நிலையில் தற்போது திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.