திருமலை: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கடந்த மாதம் 27ம் தேதி திருப்பதிக்கு வந்தனர். அலிபிரி பஸ் நிலையம் அருகே அனைவரும் இலவச தரிசன டிக்கெட் பெற காத்திருந்தனர். அப்போது, பக்தர்கள் கூட்டத்தில் 6 வயது சிறுவன் சிவம்குமார் சாகு காணாமல் போனான். இது குறித்து அலிபிரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் திருப்பதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சிறுவனை கடத்திய வாலிபரின் புகைப்படத்தை நேற்று வெளியிட்டனர். இவரை பற்றி் தகவல்தெரிந்தால் கூறும்படி போலீசார் தெரிவித்துள்ளனர்.