டெல்லி: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப் படுகிறது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோயம்புத்தூரில் இருப்பேன் என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.