×

போதை பொருள் விற்பனை 2 நைஜீரியர்கள் கைது

பெங்களூரு: பெங்களூரு இந்திராநகர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு எக்ஸ்ட்டீசி போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று முன்தினம் இரவு சி.சி.பி போலீசார் இந்திராநகர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை சி.சி.பி போலீசார் கைது செய்தனர்.

நைஜீரியாவை சேர்ந்த சுவாக் இமாக் (24), அயாம்ஷிலம் பரோஜ் (35)என்று தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 56 எக்ஸ்ட்டீசி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வரவழைத்து பெங்களூருவில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்திராநகர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Nigerians , Drugs, 2 Nigerians, arrested
× RELATED மேட்ரிமோனியல் மூலம் அமெரிக்க...