சென்னை: அமமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதவின் 73வது பிறந்தநாள் விழா 24ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. அன்று காலை 11 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த இருக்கிறார். இதை தொடர்ந்து அன்றைய தினம் மாலை 5 மணியளவில் தாம்பரம், சண்முகம் சாலையில் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் தெற்கு, தென்சென்னை கிழக்கு ஆகிய மாவட்டங்களின் சார்பில் நடைபெற இருக்கும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் டிடிவி.தினகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி கலந்துகொள்ள வேண்டும்.