திருவனந்தபுரம்: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் பாஸ்டரை போலீசார் கைது செய்தனர். ேகரள மாநிலம் இடுக்கி கொன்னத்தடி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ (74). இவர் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகேயுள்ள ஒரு சர்ச்சில் பாஸ்டராக உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் சர்ச்சுக்கு வந்த 16 வயது சிறுமியை பாஸ்டர் மேத்யூ பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறி கதறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குன்னத்துநாடு போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து பாஸ்டர் மேத்யூவை தேடி வந்தனர். இந்த நிலையில் கொன்னத்தடி பகுதியில் அவர் தலைமறைவாக இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து ெசன்ற போலீசார், பாஸ்டர் மேத்யூவை கைது செய்து கோலஞ்சேரி சிறையில் அடைத்தனர்.