சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வருகிற 23ம் தேதி வ.உ.சிதம்பரனார், சுப்பராயன், ராமசாமி ரெட்டியார் உருவ படங்கள் திறக்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் திருவள்ளுவர், காந்தி, ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா, காயிதே மில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், எம்ஜிஆர், ஜெயலலிதா, ராமசாமி படையாச்சியார் ஆகிய 12 படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், சட்டப்பேரவையில் வருகிற 23ம் தேதி வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் உருவ படங்கள் திறக்கப்படுகின்றன. மூன்று தலைவர்களின் படங்கள் திறப்பதன் மூலம் பேரவையில் தலைவர்கள் படங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்கிறது. இதற்கான விழா பேரவையில் வரும் 23ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவுக்கான அழைப்பிதழை நேற்று தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.