×

உபி.யில் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது

சித்ரகூட்: உத்தரப் பிரதேச மாநிலம், சித்ரகூட் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. 7ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞர், கடந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர். பின்னர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில், கடந்த 9ம் தேதி சிகேந்தர் என்கிற அமர்நாத் திவேரியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.  இந்நிலையில், சிறுமியின் கர்ப்பம் வளர்ந்து விட்டதால் அதை கலைக்க முடியாத நிலை உருவானது. இதனால், கர்ப்பணியாகவே வாழ்க்கையை ஓட்டிய சிறுமிக்கு, சமீபத்தில் பெண்  குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த சில நிமிடங்களில் குழந்தை இறந்து விட்டது. குழந்தையின் டிஎன்ஏ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

Tags : Ubi , The baby was born to a 13-year-old girl who was raped in UP
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்