திருச்சி: பிப்.21ம் தேதி திருச்சியில் ஜ.ஜே.கே. மகளிரணி, மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெறவிருக்கிறது. ஜ.ஜே.கே. நிறுவனர் தலைவர் பாரிவேந்தர், கட்சி தலைவர் ரவிபச்சமுத்து கூட்டத்தில் பங்கேற்கின்றனர். சட்டமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை பற்றி கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.