×

திருமுல்லைவாயல் பகுதியில் பைக் திருடிய 2 பேர் கைது: 3 வது கண்மூலம் பிடிபட்டனர்

ஆவடி: திருமுல்லைவாயலில் பைக் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கண்ணதாசன் (30). இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். கடந்த 6ம் தேதி இரவு பணி முடித்துவிட்டு பைக்கில் திரும்பினார். திருமுல்லைவாயல் அம்பேத்கர் நகர் பகுதியில் வந்தபோது பைக்கில் கிளட்ச் வயர் கட்டாகி பைக் ரிப்பேரானது. இதனால் பைக்கை ஓட்ட முடியாததால் அப்பகுதியில் உள்ள தெரிந்தவர் கடையில் பைக்கை விட்டுவிட்டு கண்ணதாசன், ஆட்டோவில் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.

இதன்பிறகு மறுநாள் காலையில்  எடுக்கவந்தபோது பைக்கை காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்தார். கடைக்காரர் மற்றும் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்ைல. இதனால் கண்ணதாசன், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில புகார் கொடுத்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது பைக் திருடிய நபர்களின் உருவம் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில், அம்பத்தூர் அருகே சூரப்பட்டு சண்முகபுரம் பாரதிதாசன் நகரை சேர்ந்த ரமேஷ் (23), கபில் (22) ஆகியோரை நேற்று மாலை கைது செய்து, அவர்களிடம்  இருந்து கண்ணதாசனின் பைக்கை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : area ,Thirumullaivayal , Thirumullaivayal, bike theft, 2 persons, arrested
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...