×

10 வருஷமும் கண்டுக்கல..! தமிழ்ச்செல்வன், காஞ்சிபுரம்.

பாரம்பரியமான காஞ்சி மாநகரில் புதிய ரயில் நிலையத்தில் ரயில்வே கிராசிங்கை கடக்க மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி முழுமையடையாமல் உள்ளது. இதனால் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள், திண்டிவனம் -நகரி புதிய ரயில்வே வழித்தடம் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால், இந்த கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை மாநகர் நோக்கி செல்பவர்கள் பெரும்பாலும் சாலை போக்குவரத்தையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் மக்களின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் விட்டவர்களுக்கு காஞ்சிபுரம் தொகுதி மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.


Tags : Tamilchelvan ,Kanchipuram , Construction work on the flyover to cross the railway crossing at the new railway station in the traditional Kanchi city is nearing completion.
× RELATED டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்