கோவை: கோவை அருகே பெண் காவல் ஆய்வாளரின் கணவரை தாக்கி கார் கடத்தப்பட்டுள்ளது. ஈரோடு போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜின், தனது கணவருடன் கேரளாவில் இருந்து கோவை வந்துள்ளார். மனைவி சஜினை கோவை காந்திபுரத்தில் இறக்கிவிட்டு கணவர் வின்சென்ட் குமார் கேரளா திரும்பி உள்ளார். இந்தநிலையில் மதுக்கரை அருகே 6 பேர் கும்பல், வின்சென்ட் குமாரை மறித்து அவரை தாக்கி காரை கடத்தி சென்றுள்ளனர்.