நாமக்கல்: சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் வளையக்காரனுரில் அருந்ததியர் அரசியல் ஆதரவு மாநாட்டில் முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார். சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு முழு உருவச் சிலையுடன், மணிமண்டபமும் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.