×

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி காங். மகளிரணி ஏர்கலப்பை போராட்டம்: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் மகளிரணியினர் நேற்று ஏர்கலப்பை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மகளிர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் வரவேற்றார். மாநில செயலாளர் விஜய் வசந்த், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் செங்கம் குமார், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், பாண்டிச்சேரி முதல்வர் மகள் விஜயகுமாரி, பாண்டிச்சேரி மகளிர் காங்கிரஸ் தலைவர் பஞ்சகாந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசினார்.

Tags : Cory Kong ,Women , Cory Kong to repeal agricultural laws. Women's Air Force Struggle: KS Alagiri Participates
× RELATED ‘மேட்ரிமோனியல்’ இணையதளம் மூலம் 7...