சென்னை: தமிழக மக்களை கண்டு மோடி அச்சப்படுவதால் சாலையில் செல்லாமல் வான்வழியாக சென்றதாக குமிடிப்பூண்டியில் நடைபெற்ற ஏர் கலப்பை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். விவசாய பிரச்சனைகளை தீர்க்காமல் ஒளவையார் பாடலை பிரதமர் மேற்கோள் காட்டுவது எதிரும் புதிருமானது என கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.