×

ஆந்திர மாநிலம் மாதாபுரம் அருகே லாரி மீது வேன் மோதி விபத்து; 14 பேர் உயிரிழப்பு; 4 பேர் காயம்

மாதாபுரம்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மாதாபுரம் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். வேனில் பயணம் செய்த ஒரு குழந்தை, 5 பெண்கள் உளப்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் ஒன்றில் அஜ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த டெம்போ வேன் கர்னூல் மாவட்டத்தில் மாதாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்தவர்களில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயம் ஏற்பட்ட 4 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே உயிரிழந்த 14 பேரின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை அதிகம் பணிமூட்டம் இருப்பதால் விபத்து ஏற்பட்டிற்கலாம் என கூறப்படுகிறது.

Tags : Van ,Andhra Pradesh ,Mathapuram , AP, lorry, van, accident, 14 dead
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...