சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இன்று இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை பிரதமர் மோடி துவக்கி வைப்பதை முன்னிட்டு நண்பகல் முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்ய மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.