திருவள்ளூர்: திருவள்ளூர் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் சின்ன ஈக்கட்டிலிருந்து ஈக்காடு சொசைட்டி நகர், எம்பயர் சிட்டி வழியாக காக்களூர் சிடிஎச் சாலைக்கு செல்லும் வகையில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. சின்ன ஈக்கட்டில் உள்ள செங்குன்றம், திருவள்ளூர் நெடுஞ்சாலை முதல் ஈக்காடு சொசைட்டி நகர், எம்பயர் சிட்டி வழியாக காக்களூர் சிடிஎச் சாலை வரை 1.81 கோடி மதிப்பில் புதிய சாலையாக அமைக்கப்பட்டது. ஆனால் இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை அமைத்ததால் மக்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே இந்த சின்ன ஈக்காடு, செங்குன்றம், திருவள்ளூர் நெடுஞ்சாலையில் இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை முறையாக அகற்றி அகலப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.