×

கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் பணம் பறித்த பிரபல கொள்ளையன் கைது

பண்ருட்டி, மார்ச் 1:பண்ருட்டி லிங்க் ரோட்டில் தனியார் பள்ளி அருகே வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர், அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது மனைவி யசோதை (62) கடையில் இருந்தார். அப்போது பைக்கில் அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர், அரிசி கடையில் இருந்த யசோதையிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துசென்றார். இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அதில், பண்ருட்டி திருவதிகை குட்டை தெருவை சேர்ந்த அப்பு என்கின்ற அய்யனார் (27) என தெரியவந்தது. இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு தலையிலான தனிப்படை போலீசார், அய்யனாரை வலது கால் எலும்பு முறிவுடன் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது கடலூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 50க்கு மேற்பட்ட திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் பணம் பறித்த பிரபல கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Panruti ,Rajendran ,Panruti Link Road ,Yashodai ,Dinakaran ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு