டெல்லி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாக குறைக்க கோரிய இடையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த ரசூல் ஜாயின் இடையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அணை பாதுகாப்பு கண்காணிப்பு துணைக்குழுவை கலைக்க கோரும் மனு மீது மத்திய அரசு பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது.