×

மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் பலி: இருவர் மாயம்

சென்னை: ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சிவபாஜி (18), ஆவடியில் உள்ள பிரபல தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர், நேற்று சக மாணவர்களான ஆந்திராவை சேர்ந்த ஆகாஷ் (18), ராஜசேகர் (19), சிவபிரசாத் (18), கோபிநாத் (18) ஆகியோருடன் கல்வி கட்டணம் செலுத்த கல்லூரிக்கு வந்துள்ளார். பின்னர், 5 பேரும் நேற்று மெரினா கடற்கரைக்கு வந்து, கடலில்  குளித்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி சிவபாஜி, ஆகாஷ், கோபிநாத் ஆகியோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த நண்பர்கள் ராஜசேகர் மற்றும் சிவபிரசாத் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கவசத்துடன் கடலில் இறங்கி 3 மாணவர்களை தேடினர். அதில் சிவபாஜி மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். ஆகாஷ் மற்றும் கோபிநாத் ஆகியோர் கிடைக்கவில்லை. மீனவர்கள் உதவியுடன் அவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.  அண்ணாசதுக்கம் போலீசார், மாணவன் சிவபாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : College student ,Marina Sea , College student killed in giant wave while bathing in Marina Sea: Two magic
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது