×

வங்கி வாடிக்கையாளர் கணக்கில் 82 லட்சம் கையாடல் உதவி மேலாளர் கைது

சென்னை: எஸ்பிஐ வங்கியின் உதவி மேலாளர் ஜிடகாம் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  புகார் ஒன்று அளித்தார். அதில், எழும்பூர் கிளையில் உள்ள எங்கள் வங்கியில் லோன் வழங்கும் பிரிவில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்த மாதவன், வாடிக்கையாளர் ராமகிருஷ்ணன் கணக்கில் இருந்து 82 லட்சம் கையாடல் செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், லோன் வழங்கும் பிரிவில் உதவி மேலாளராக வேலை செய்து வந்த கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருமைக்காரன் புதூரை சேர்ந்த மாதவன் (35) கடந்த 2013-14ம் ஆண்டு பங்கு சந்தையில் முதலீடு செய்து அதற்கு அடிமையாகியுள்ளார். இதனால் பல இடங்களில் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார்.

அதில் அவருக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளரான ராமகிருஷ்ணன் கணக்கில் இருந்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன்னுடைய செல்போன் எண் மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்கு எண்ணை ராமகிருஷ்ணன் வங்கி கணக்கில் இணைத்துள்ளார். பிறகு ஆன்லைன் மூலம் அந்த வங்கி கணக்கில் இருந்து 82 லட்சம் கையாடல் செய்தது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்தனர்.


Tags : bank account assistant manager , 82 million in the bank customer's account support manager arrested for embezzlement
× RELATED வங்கி வாடிக்கையாளர் கணக்கில் 82 லட்சம் கையாடல் உதவி மேலாளர் கைது