×

நபிகள் குறித்து அவதூறு கருத்து : பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

சென்னை:நபிகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக நிர்வாகியான கல்யாணராமன் ஆர்பாட்டத்தில் பேசும்போது, நபிகள் குறித்து தவறான கருத்துகளை கூறினார். இதற்கு முஸ்லீம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், முஸ்லீம் அமைப்புகள் சார்பில் கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையை சேர்ந்த முகமது கெளஸ் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கல்யாணராமன் பேசிய ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அவர் நபிகள் குறித்து அவதூறாக பேசியது தெரியவந்தது.
அதைதொடர்ந்து பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத உணர்வுகளை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இதே வழக்கில் போலீசார் கல்யாணராமனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை போலீசாரும் அவரை கைது செய்வது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



Tags : Kalyanaraman ,Prophet ,BJP , கல்யாணராமன்
× RELATED அண்ணல் நபிகளின் வழியில் வாழ்ந்து...