×

குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

சென்னை: ஆந்திராவில் சுற்றுலாவுக்கு சென்றபோது பெரும்புதூரை சேர்ந்த சிறுவன், பெற்றோர் கண்முன்னே குட்டையில் மூழ்கி பலியானான்.
காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மகன் அபிஷேக்(14). முத்துகுமார், தனது குடும்பத்துடன் சுற்றுலாவுக்காக ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள வரதய்யாபாளையம் அடுத்த உப்பலமடுகு நீர்வீழ்ச்சிக்கு நேற்று முன்தினம் சென்றார்.

அப்போது, அங்குள்ள ஒரு குட்டையில் சிறுவன் அபிஷேக் குளிக்க சென்றான். அதில், ஆழமான பகுதிக்கு சென்றபோது சிறுவன், தண்ணீரில் மூழ்கினான். இதைப்பார்த்த பெற்றோர், அபிஷேக்கை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தகவலறிந்து சத்தியவேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, இரவு முழுவதும் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் அபிஷேக்கை சடலமாக மீட்டனர்.


Tags : Chennai, boy, killed
× RELATED கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து...