×

அதிமுக கொடியுடன் சசிகலா தமிழகம் வந்தால் நடவடிக்கை உறுதி: துணை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

சென்னை: அதிமுக கொடியுடன் சசிகலா தமிழகம் வந்தால் நடவடிக்கை உறுதி என துணை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக கொடியை காரிலிருந்து அகற்ற ஜூஜூவாடி எல்லையில் சசிகலாவுக்கு காவல்துறை நோட்டீஸ் வழங்க உள்ளது. தமிழக-கர்நாடக எல்லையில் சசிகலா அவர்கள் பயணிக்கும் காரில் உள்ள அதிமுக கொடியை அகற்ற அவகாசம் கொடுக்கப்படும். அகற்றாவிட்டால் சசிகலா அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கும் அடுத்த இடத்தில் கொடி கட்டாயமாக அகற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Sasikala ,Tamil Nadu ,Deputy Superintendent of Police ,AIADMK , If Sasikala comes to Tamil Nadu with AIADMK flag, action will be confirmed: Deputy Inspector of Police warns
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!