×

ஆபாச படம் எடுத்து மிரட்டிய கள்ளக்காதலன் அடித்து கொலை: சடலத்தை சாக்குமூட்டையில் எடுத்து சென்ற தம்பதி ரோந்து போலீசாரிடம் பிடிபட்டனர்

சென்னை: மீஞ்சூர் அடுத்த காட்டூர் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் ஆணும், பெண்ணும் சாக்கு மூட்டையுடன் சென்றனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை மடக்கி மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் ஆண் சடலம் இருப்பது கண்டு திடுக்கிட்டனர். விசாரணையில், அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தேவேந்திரசிங்(41), அவரது மனைவி சாயா(33) என்பதும், இவர்கள் காட்டூர் திருக்குளம் பகுதியில் வசிப்பதும் தெரிந்தது. இவர்களதுவீட்டின் அருகே வசித்த மனோஜிக்கும் (30), சாயாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் உல்லாசமாக இருந்தபோது, அதனை மனோஜ் செல்போனில் படம் எடுத்துள்ளார். மேலும், தன்னுடன் நிரந்தரமாக வாழாவிட்டால் அந்தரங்க படத்தை கணவரிடம் காட்டிவிடுவதாக சாயாவை மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சாயா இதுபற்றி கணவர் தேவேந்திரசிங்கிடம் கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த தேவேந்திரசிங், மனைவியுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மனோஜ் வீட்டிற்கு சென்று உருட்டைக்கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி பைக்கில் ஏற்றி வாயலூரில் உள்ள காட்டுப்பகுதியில் வீசுவதற்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர். மனோஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : lover ,death ,patrol police , Chennai, fake boyfriend, murder, couple, arrested
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...