சென்னை: எழுவர் விடுதலையில் அரசுக்கு அக்கறை இருந்தால் மீண்டும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். அமைச்சரவையில் மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி சட்ட விளக்கத்துடன் ஆளுநருக்கு 2வது முறையாக அனுப்ப வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேரறிவாளன் பிரச்னை என்பதை விட மாநில அரசின் கவுரவம், உரிமை பிரச்னை என்ற புரிதல் அரசுக்கு வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.