திருவாரூர், மார்ச் 13: இந்திய நாடு அறிவு மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களின் பங்களிப்பு அவசியமானது என்று சர்வதேச மைய மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப இயக்குனர் பேராசிரியர் ரமேஷ் சோண்டி தெரிவித்துள்ளார். திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை சார்பில் இயங்கி வரும் இந்த பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழு வதும் இருந்து வரும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2,750 மாணவ, மாண விகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த பல்கலைக்கழகத்தில், 5 வருடபடிப்பாக எம்எஸ்சி இயற்பியல், எம்எஸ்சி வேதியல், எம்எஸ்சி கணிதம், எம்எல்சி பயோ டெக்னாலஜி, எம்.ஏ பொருளா தாரம் மற்றும் பிஎஸ்சி, பி.எட் (கணிதம்) உட்பட பல்வேறு பாடப் பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த பல்கலைகழகத்தில் 7வது ஆண்டு பட்டமளிப்பு விழா பல்கலைகழகத்தின் வேந்தர் முனைவர் பத்மநாபன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக, டெல்லி சர்வதேச மைய மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப இயக்குனர் பேராசிரியர் ரமேஷ் சோண்டி கலந்து கொண்டு 917 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகை யில், மாணவர்கள் தங்களது கடின உழைப்பு காரணமாகவும், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்களின் உறுதுணை யோடும் இன்று பட்டங்களை பெற்றுள்ளீர்கள். அதன்படி இன்று பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் பெற்ற கல்வி என்பது 21ம் நூற்றாண்டின் இந்தியாவை கட்டி எழுப்புவதற்கு பெரிதும் உதவும். எந்த துறையில் அல்லது பதவியில் இருந்தாலும் அதை நமது சமூகத்திற்கும், நாட்டிற்கும் எந்த வடிவத்திலா வது திருப்பி தருவோம் என்ற உறுதி மொழியினை மாணவர்கள் ஏற்றுகொள்ள வேண்டும். நாட்டின் எதிர்கால மேம்பாடு மிகவும் தொழில் நுட்பம் சார்ந்ததாக உள்ளதால் அதற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். உயர்கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகள் உலகம் முழுவதும் காத்துகிடக்கின்றன. அவ்வாறு தொலைதூர நாடுகளுக்கு பயன் சென்று கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை கற்றுகொண்டு மாணவர்கள் நமது தேசத்திற்கு பங்காற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்திய நாடு அறிவு மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களின் பங்களிப்பு அவசியமானது என்பதால் அதற்கேற்ப மாணவர்கள் தங்களது பங்களிப்பினை அளிக்க வேண்டும். இவ்வாறு பேராசிரியர் ரமேஷ் சோண்டி தெரிவித்தார். முன்னதாக, பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் வரவேற்றார். பல்கலைகழக பேராசி ரியர் வேல்முருகன் நன்றி கூறினார்….
The post நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற படித்த இளைஞர்களின் பங்கு அவசியமானது appeared first on Dinakaran. | நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற படித்த இளைஞர்களின் பங்கு அவசியமானது | Dinakaran
×
நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற படித்த இளைஞர்களின் பங்கு அவசியமானது
05:43 am Mar 13, 2023 |
Tags : Thiruvarur ,India ,Ramesh Chondi ,International Center for Genetic Engineering and Biotechnology ,Tamil Nadu Central University ,Neelkudi ,Tiruvarur ,Tamil Nadu ,Human Resource Development Department of the Central Government ,MSc ,Dr. ,Padmanabhan ,Prof. ,Genetic Engineering ,Delhi International Center ,Vice-Chancellor ,Krishnan ,University Professor ,Riya Velmurugan ,Dinakaran ,