×

பெருங்களூரில் இருந்து ஆதனக்கோட்டை வரை ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் பாதயாத்திரை

கந்தர்வகோட்டை, ஆக. 11: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள ஆதனக்கோட்டையில் மத்திய பாஜக அரசை கண்டித்து பெருங்களூரிலிருந்து, ஆதனக்கோட்டை வரை காங்கிரஸ் கட்சியினர் 75வது சுதந்திர தின பவள விழாவினை முன்னிட்டு பாதயாத்திரை நடைபெற்றது. பாதயாத்திரைக்கு காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையிலும், மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் டெனட் அந்தோணிராஜ் முன்னிலையில் நடைபெற்ற பாதயாத்திரையில் மத்திய பா.ஜ. க மோசடி மோடி ஆட்சியின் அமலாக்கத்துறை சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்கு, பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு அரிசி ,பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே எனவும், மோடி அரசே பதவி விலகு என முழங்கியவாறு பாதயாத்திரை பெருங்களூர் ஊராட்சியில் தொடங்கி ஆதனக்கோட்டை வரை பத்து கிலோ மீட்டர் நடைபெற்ற இந்த பாதயாத்திரையில் மோடி அரசுக்கு எதிப்பான கோஷங்களை முழங்கியவாறு பேரணியாக நடந்து சென்றனர். இந்த பாதயாத்திரையில் புதுக்கோட்டை ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் கே.எம்.ராஜகோபால், ஆதனக்கோட்டை பார்வதி தமிழ்வாணன், பெருகை மாறன், சுப்ரமணி, நடராஜன் ,ஜெய்சங்கர் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்….

The post பெருங்களூரில் இருந்து ஆதனக்கோட்டை வரை ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் பாதயாத்திரை appeared first on Dinakaran.

Tags : Perungalur ,Adhanakotta ,Union Government ,Gandharvakota ,Pudukottai ,Adhanakottai ,Kandarvakottai ,BJP government ,
× RELATED ஓபிஎஸ்சுக்கு எதிராக போட்டியிட்ட 5...