திருச்சி:தமிழக அமைச்சர்களில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்களில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் ஒருவர். பிரதமர் மோடி எங்களுக்கு டாடி, அதிமுக ஆன்மீக கட்சி, பெரியார், அண்ணாவை பார்த்து கட்சிக்கு வரவில்லை என்பன போன்று சர்ச்சை பேச்சுகளை பேசி அதிர வைப்பதில் கில்லாடி.அமைச்சர் ராஜேந்திரபாலாஜிககு தற்போது ஏழரை சனி உள்ளதால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்ற அவர், விநாயகர், முருகன் சன்னதியில் தரிசனம் செய்து தர்பாரண்யேஸ்வரர், அம்பாள் மற்றும் சனி பகவான் சன்னிதானத்தில் அர்ச்சனை செய்து வழிபட்டார். தொடர்ந்து சனி பகவான் தனக்கும் கட்சிக்கும் நல்வழி காட்ட வேண்டும் என வேண்டி 9 தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினார். சசிகலா வெளியில் வந்துவிட்ட சூழ்நிலையில், நாக்கில் சனி காரணமாக ஏதாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்ளக்கூடாது என சனி பகவானிடம் ராஜேந்திரபாலாஜி சரணாகதி அடைந்திருப்பார் என்று அவருக்கு வேண்டப்படாதவர்கள் சிரிப்பாய் சிரிக்கின்றனர்.