மதுரை: மதுரை விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்துக்கு மர்ம பார்சலில் வந்த கை கடிகாரத்தால் பரபரப்பு நிலவியது. நாகர்கோவிலில் இருந்து அனுப்பப்பட்ட பார்சலை விமான நிலையத்தில் சோதனை செய்தனர். கை கடிகாரத்துடன் ஒயர் இணைக்கப்பட்டு இருந்ததால் விமான நிலையத்தில் இருந்தவர்களை வெளியேற்றி அதிகாரிகள் சோதனை செய்தனர்.