×

வளர்ச்சி பணிகளில் மெத்தனம் பதவியை காப்பாற்றி கொள்ள நாடகமாடும் பாஜவினர்: முன்னாள் துணைமுதல்வர் பரமேஸ்வர் குற்றச்சாட்டு

துமகூரு: மாநிலத்தில்  ஆளும் பாஜ அரசு எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ளாமல் மெத்தன போக்கு  கடைப்பிடித்து வருகிறார்கள். மேலும் தங்களது பதவியை காப்பாற்றி கொள்ள  நாடகமாடி வருகின்றனர் என்று முன்னாள் துணை  முதல்வர் பரமேஸ்வர் குற்றம்  சாட்டினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,  முதல்வர் எடியூரப்பா, தனது பதவியை காப்பாற்றி கொள்ளவேண்டும் என்பதில்  குறியாக இருக்கிறார். அவரின் பதவிக்கு ஆட்டம் ஏற்படும்  போதெல்லாம்  எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டுவது அவரின் வாடிக்கையாகிவிட்டது.  அதன்பிறகு சில நாட்களில் அது பற்றிய எந்த தகவலும் வெளியே வருவதில்லை. முதல்வர்  எப்படியோ, அவரை போலவே அவரின் அமைச்சரவையில்  இடம் பெற்றுள்ள அமைச்சர்களும்  உள்ளனர்.

அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக  அமைச்சர்களும் அவர்களுக்கு தெரிந்த தகிடதத்தம் வேலையில் ஈடுபட்டுள்ளார்களே  தவிர வளர்ச்சி பணிகளில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. முதல்வர்   எடியூரப்பாவுக்கு மட்டுமின்றி அவரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களும்  அவரவர் பதவியை காப்பாற்றி கொள்வதற்கே கஷ்டப்படும் நிலையில் கர்நாடக  மக்களின் நலனை அவர்கள் கவனிப்பார்களா? கடந்த மூன்றாண்டுகளாக வறட்சி,   வெள்ளம், கொரோனா என இயற்கை சீற்றம் மக்களை பாதித்துள்ளது. கஷ்டத்தில்  வாழும் மக்களை தூக்கிவிட வேண்டிய அரசு, காலில் போட்டு மிதித்து வருகிறது’’  என்றார்.

Tags : BJP ,Parameswar , BJP will not play to retain lax position in development work: Former Deputy Chief Minister Parameswar accused
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...