பெங்களூரு: பிஇஎம்எல் புதிய நிர்வாக இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் பி.இ.எம்.எல். கனரக தொழிற்சாலை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபக்குமார் ஹோடா பதவிக்காலம் முடிந்தது. இதைத்தொடர்ந்து சுரங்கம் மற்றும் கட்டிட பணி இயக்குநராக பணியாற்றும் எம்வி ராஜசேகருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம்தேதி பி.இ.எம்.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பை எம்வி ராஜசேகர் கூடுதலாக ஏற்றுக்கொண்டார். இவ்வாறு பி.இ.எம்.எல். செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.