புதுடெல்லி; டெல்லியில் விரைவில் அனைத்து பள்ளிகளிலும் நர்சரி மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். டெல்லியில் உள்ள பள்ளி முதல்வர்களுடன் கலந்துரையாடும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதல்வர் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவால் பேசும் போது,’ டெல்லியில் உள்ள நர்சரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிக விரைவில் நடத்தப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். கொரோனா பேரிடர் சூழலால் இந்த ஆண்டு நர்சரி மாணவர் சேர்க்கை காலதாமதமாகி உள்ளது’ என்றார். டெல்லியில் 1700 நர்சரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். வழக்கமாக இந்த பள்ளிகளில் நவம்பர் மாதம் கடைசி வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால் கொரோனா சூழல் காரணமாக எந்த நடவடிக்கையும் இந்த கல்வியாண்டில் எடுக்கப்படவில்லை. தற்போது மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.