சென்னை: அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். கட்சியிலேயே இல்லாத சசிகலா, சட்டவிரோதமாக அதிமுக கொடியை பயன்படுத்துவதாகவும் அமைச்சர் புகார் கூறியுள்ளார். 30 ஆண்டுகளாக சசிகலா, அவரது குடுத்பத்தினர் அதிமுகவை ஏமாற்றியுள்ளார். இனி நாங்கள் ஏமாறமாட்டோம் என சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.