சென்னை: தென்தமிழக கடலோர மாவட்டங்களில் 2ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட நிலையே காணப்படும். மேலும், 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை பலத்த காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.