×

காங்கிரஸ் தூண்டுதலால் விவசாயிகள் டிராக்டர் பேரணி: அமைச்சர் குற்றச்சாட்டு

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலால் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்படுகிறது என ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்தார். ஹூப்பள்ளியில் இது தொடர்பாக அமைச்சர் ஜெகதீஷ்ஷெட்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை 1-2 ஆண்டுகள் காலம் சோதனை நடத்தப்படும். இதில் விவசாயிகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் திரும்பபெற முயற்சிக்கப்படும். எந்த அரசும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வேலையில் ஈடுபடாது. உண்மையான விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் பின்னணி கொண்டவர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதே போல் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ் தூண்டுதலால் இது போன்ற பேரணிகள் நடத்தப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் ஏ.பி.எம்.சி. சட்டம் மாநிலத்தில் உள்ளது அப்படியிருந்தும் விவசாயிகளுக்கு ஏன் நன்மை ஏற்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். அரசியல் லாபத்துக்காக காங்கிரஸ் இது போன்ற வேலைகள் செய்து வருகிறது’’ என்றார்.


Tags : Farmers Tractor Rally ,Congress ,Minister , Farmers Tractor Rally Inspired By Congress: Minister Alleged
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...