×

யூசுப் சாராய் விருந்தினர் விடுதியில் திடீர் தீ

புதுடெல்லி; டெல்லி யூசுப் சாராய் விருந்தினர் விடுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள இரண்டாவது தளத்தில் இரண்டு கேஸ் சிலிண்டர் வைக்கப்பட்ட இருந்தது. அது வெடித்து சிதறியதால் காலை 8 மணி அளவில் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதே போல் மேற்கு டெல்லி பாசிஷிம் விஹார் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 7 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தன. அங்கு தீயில் சிக்கிக்கொண்ட 2 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அருகில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Tags : fire ,Yusuf Sarai ,Guest House , Sudden fire at Yusuf Sarai Guest House
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா